TN School Reopen Date 2023 Postponed Option
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின் படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஜூன் 7 பள்ளிகள் திறப்பு :
“தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம்.
ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சரிம் ஆலோசனை கேட்கப்பட்டது.
ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்”, என்றார்.
தமிழகத்தில் ஜூன் 15 பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா?
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை இன்னும் ஒரு வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 7 பள்ளிகள் திறந்ததும் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு:
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளி தொடங்கிய 2 நாட்களில், அதாவது 9-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது.
இந்த குழு கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல் தடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும். புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வராத மாணவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதை பற்றி ஆலோசனை செய்யப்படும். அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனை செய்யப்படும்.
மாற்றுத் திறன் குழந்தைகள் இருந்து, அவர்கள் வகுப்புகளுக்கு சேராமல் இருந்தால் அவர்களை மீண்டும் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். இது போன்ற சிறப்பு தேவை கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்படும்.
அதேபோல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாகவும் இந்த குழு கூட்டத்தில் முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் கண்டிப்பாக வரும் 9ம் தேதி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Latest Updates:
For More Job Info Join:
| Join |





