NIACL Assistant Job 2024
NIACL Job: அரசு வேலையை தேடும் போட்டியாளர்களுக்கு இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனி அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும்.
Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 500
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.12.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம்: 40,000
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு:
முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும்.
இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வு:
முதன்மைத் தேர்வு கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) என மொத்தம் 250 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.newindia.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி 01.01.2025.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ரூ.850. எஸ்.சி/ எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.100.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.newindia.co.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.