Happy News For TN School Students
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கலைஞரின் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு மதிய சத்துணவு திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கலைஞரின் நுற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது அலமேலு அம்பாள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் “என்னால் முடியும்” என்ற தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளின் அடிப்படையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பான பங்கினை ஆற்றிய மாணவர்களுக்கு ஊக்கத்தொக, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மூன்று சக்கர வாகனம், ஏழை மாணவர்களுக்கு சலவை பெட்டி, தொழில், வியாபாரம் செய்வதற்கு உதவியாக உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டது.

Latest Updates:
For More Job Info Join:
| Join |





